ஊழல்

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதின் இரு மகன்கள் ஊழல் தொடர்பாக தாங்கள் நாட்டின் ஊழல் விசாரணை ஆணையத்தின்கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூட்டாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மீது அவரது மகன்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவர் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 25) தெரிவித்தார்.
கோல்கத்தா: மேற்கு வங்க ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால்அமைக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தானது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 388,000 வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இருவருக்கு நிம்மதி கிடைத்தது.
புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இடைக்கால பிணை கோரி பிஆர்எஸ் மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்தரசேகர ராவ் மகளுமான கவிதா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) தள்ளுபடி செய்துள்ளது.